Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் காந்தியடிகளின் 150 பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் சா்வோதயா சங்கம் சார்பில் அவரது உருவ படத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சர்வோதய சங்க செயலாளர் ராஜாராமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் சங்கத்தின் பொருளாளர் சிவக்குமார் மூத்த வழக்கறிஞர் கோதண்டபாணி, சர்வோதயா சங்க தலைவர் செல்லத்துரை, தலைமையாசிரியர் சாரதி, முன்னாள் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காந்தியின் உருவபடத்தை வாகனத்தில் வைத்து மலா்களால் அலங்கரித்து , கம்பட்ட விஸ்வநாதா்கோயில் அருகில் உள்ள அலுவலகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள வழியாக காந்தி பூங்காவை சென்று அடைந்தது. பின்னா் அங்குள்ள காந்தியின் உருவ சிலைக்கு மலா் துாவியும், மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சர்வ மத பிராத்தனை நடைபெற்றது. தொடர்ந்து காந்தி பூங்காவில் காந்திய சிந்தனைகளை பெரிதும் வலியுறுத்தும் பாடல்கள் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.